search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
    X

    குளச்சல் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

    குளச்சல் அருகே 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    குளச்சல்:

    குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

    மாணவியின் தாயார், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கர்ப்பிணியாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதை அறிந்த தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் மகளிடம் இது பற்றி விசாரித்தார். அப்போது மாணவி, தனது கர்ப்பத்திற்கான காரணம் குறித்து தாயாரிடம் கூறினார்.

    அதில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது தந்தை தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனை வெளியில் சொன்னால் தன்னையும், தாயாரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தாயார், குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தன் கணவர் மைக்கேல் என்ற மிக்கேல் (வயது 44) என்பவர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இப்புகார் குறித்து குளச்சல் போலீசார் மிக்கேல் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர். மிக்கேல் கட்டிட தொழிலாளி ஆவார். சம்பவம் நடந்த பின்பு அவர் தலைமறைவாகி இருந்தார். எனவே அவரை உடனே கண்டுபிடித்து கைது செய்யும்படி குளச்சல் போலீசாருக்கு ஏ.எஸ்.பி. கார்த்திக் உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தலைமறைவான மிக்கேலை தேடி வந்தனர். இதில் அவர் பொள்ளாச்சி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், மிக்கேலை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் குளச்சல் அழைத்து வரப்பட்டார். இங்கு விசாரணைக்கு பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்கிடையே பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
    Next Story
    ×