search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திறந்த வேனில் டி.டி.வி. தினகரன் பேசிய காட்சி.
    X
    திறந்த வேனில் டி.டி.வி. தினகரன் பேசிய காட்சி.

    குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள்- டிடிவி தினகரன்

    விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் பொதுமக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் பேசினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran
    உடுமலை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் 3 நாட்கள் பிரசார பயணம் மேற்கொள்கிறார். நேற்று மாலை அவர் உடுமலை பஸ் நிலையம் முன்பு இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார்.

    அவர் மக்களுடனான பிரசாரம் பயணம் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் டி.டி.வி. தினகரன் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் புதிய பிரசார வாகனத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தேர்தல் பிரசாரம் போல் தனது புதிய பிரசார வாகனத்தில் நின்றபடி அவர் பேசியதாவது:-

    தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு கை கட்டி சேவகம் செய்கின்றனர் . துரோக சிந்தனை உடையவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள்.

    எல்லா துறையிலும் ஊழல் பெருகி விட்டது. டி.ஜி.பி., அமைச்சர் வீடுகளில் சோதனை நடக்கிறது.

    தங்களது முகத்திரை கிழிக்கப்படும் என்ற பயத்தில் உடுமலையில் கூட்டம் நடத்த இடைஞ்சல்கள் செய்தனர். யாருக்கும் பயப்படாத ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் கொடுப்போம்.

    எல்லா பிரச்சனைகளிலும் மத்திய அரசின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருக்கின்றது. மடியில் கணம் இருப்பதால் மத்திய அரசு சொல்வதை இந்த ஆட்சியாளர்கள் கேட்டு வருகின்றனர் .

    ஆனைமலையாறு நல்லாறு திட்டம் அமைக்க கேரளா அரசு தடையில்லா சான்று கொடுக்காமல் இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முயற்சிக்கவில்லை.

    காவிரியில் அதிகமாக வரும் தண்ணீரை சேமிக்கவும் எந்த திட்டமும் இந்த அரசு செய்யவில்லை.

    விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் பொதுமக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை உருவாக்கி தருவோம். உடுமலையில் தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.

    திண்டுக்கல்- பொள்ளாச்சி சாலை பணிக்காக நிலம் வழங்குபவர்களுக்கு 4 மடங்கு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அ.ம.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கொமரலிங்கம் பகுதியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது-

    மக்கள் விரோத, துரோக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு உங்கள் விருப்பமான ஆட்சி விரைவில் அமையும். இந்த அரசின் மீது ஊழல் புகார் குற்றச் சாட்டுகளை அறப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.

    அம்மாவின் ஆட்சி நடைபெறவில்லை. நாம் எதிர்பார்க்கும் மக்கள் ஆட்சி விரைவில் அமையும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். இந்த அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அம்மா ஆட்சி நடைபெறும்.

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் 100 ரூபாயை எட்டி விடும். பாரதிய ஜனதா தலைவர் நீதிமன்றத்தை அவமதித்தால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு அச்சப்படுகிறது.

    கொமரலிங்கம் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய மக்களின் கோரிக்கையான திருமூர்த்தி அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தேவனூர் புதூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தினகரன் பேசினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran
    Next Story
    ×