search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரியில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை
    X

    பொன்னேரியில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை

    பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகத்தை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகத்தை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் உதய குமார், மாநில பொருளாளர் கதிரவன், திட்ட ஒருங்கினைப்பாளர் ஜெகநாதன், மாநில துனைச் செயலாளர் வாசுதேவன் உட்பட 300-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மீஞ்சூர் வட்டார பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நிர்வாக மாறுதல் என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி விதிமுறைகளுக்கு முரணாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் பணியிட மாற்று ஆணையை உடனடியாக திரும்ப பெறவும் வலியுறுத்தினர்.

    Next Story
    ×