search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - மதுரை மத்திய சிறையில் இருந்து 16 கைதிகள் விடுதலை
    X

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - மதுரை மத்திய சிறையில் இருந்து 16 கைதிகள் விடுதலை

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது என்று அரசு முடிவெடுத்துள்ளது.

    அதன்படி ஜெயில் கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இதுவரை 8 கட்டங்களாக கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று 9-வது கட்டமாக 3 பெண்கள் உள்பட 16 பேர் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையான 16 பேரையும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். #MGRCenturyCeremony

    Next Story
    ×