என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு பரப்பிய முன்னாள் பெண் எம்எல்ஏ கைது
Byமாலை மலர்21 Sep 2018 5:00 AM GMT (Updated: 21 Sep 2018 5:00 AM GMT)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. சரஸ்வதியை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (60).
இவர் கடந்த 1995-ம் ஆண்டு கபிலர் மலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்தார்.
இந்நிலையில் கீரம்பூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவலை பரப்பி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார் என புகாரில் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து முல்லை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சரஸ்வதியை இன்று காலை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவலறிந்து தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் மற்றும் திமுகவினர் கைது செய்யப்பட்ட சரஸ்வதியை பார்க்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (60).
இவர் கடந்த 1995-ம் ஆண்டு கபிலர் மலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்தார்.
இந்நிலையில் கீரம்பூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவலை பரப்பி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார் என புகாரில் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து முல்லை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சரஸ்வதியை இன்று காலை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவலறிந்து தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் மற்றும் திமுகவினர் கைது செய்யப்பட்ட சரஸ்வதியை பார்க்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X