search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசியது வன்முறையை தூண்டக்கூடியது- கருணாஸ் மீது ஈஸ்வரன் பாய்ச்சல்
    X

    முதலமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசியது வன்முறையை தூண்டக்கூடியது- கருணாஸ் மீது ஈஸ்வரன் பாய்ச்சல்

    முதலமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசியது வன்முறையை தூண்டக்கூடியது என்று கருணாஸ் மீது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #Eswaran #Karunas
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

    ஒரு எம்.எல்.ஏ. சாதி பெயரை குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீங்கள் (கருணாஸ்) பிறந்த சாதியை உயர்வாக பேசிக் கொள்ளுங்கள். அதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. உங்களை உயர்த்தி கொள்வதற்காக அடுத்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவதாகும்.

    தமிழக அரசை பற்றி எந்த குற்றத்தை வேண்டுமானாலும் சுமத்தலாம். விமர்சனம் செய்யலாம். அந்த உரிமை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ளது. முதலமைச்சருடைய சாதியை குறிப்பிட்டு பேசுவது வன்முறையை தூண்டக்கூடியது.

    அ.தி.மு.க.வினுடைய வாக்கு வங்கியால் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனீர்களா? அல்லது உங்கள் மக்கள் செல்வாக்கால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததா?. எம்.ஜி. ஆர். காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்தினுடைய ஆதரவால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து கொண்டிருந்ததென்பது எந்தவொரு பாமரனுக்கும் தெரியும்.

    2016-ம் ஆண்டிலே ஆட்சிக்கு வந்தது கூட கொங்கு மண்டலம் கொடுத்த வெற்றிதான் என்பதை நினைவூட்டுகிறேன். அப்படி இருக்கையில் இன்னொரு சாதி போட்ட பிச்சையில் கொங்கு மண்டலத்துக்காரர் முதலமைச்சராகி இருக்கிறார் என்று சொல்வது நியாயமா?

    தனிப்பட்ட விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதல் தகுதி மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவதுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    2016-ம் ஆண்டு கடைசி நேரத்தில் உங்களை அழைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக்கினார்கள் என்பதற்காக நன்றி விசுவாசத்தை காட்டுங்கள், யாருக்கும் கவலையில்லை. ஆனால் அடுத்தவர்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள்.

    பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதை அனுமதிக்கக்கூ டாது. எல்லோருக்கும் பேச தெரியும். ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #KonguNaduMakkalDesiaKatchi #Eswaran #Karunas
    Next Story
    ×