search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் பசுமை சாலைக்கு ஆட்சேபனை- விவசாயிகள் 4 பேர் திடீர் கைது
    X

    செய்யாறில் பசுமை சாலைக்கு ஆட்சேபனை- விவசாயிகள் 4 பேர் திடீர் கைது

    பசுமை சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து ஆட்சேபனை தெரிவித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். #chennaisalemgreenexpressway

    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் விவசாய நிலங்கள் உள்பட சுமார் 700 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள் மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 639 விவசாயிகள் பசுமை சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆட்சேபம் தெரிவித்திருந்த மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்யும் கூட்டத்தை நேற்று நடத்தினர்.

    இதில், செய்யாறு தாலுகாவில் ஆட்சேபனை தெரிவித்த 74 பேரில் 58 பேர் கலந்து கொண்டு எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை விட்டு கொடுக்க மாட்டோம் என்றனர்.

    இந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்காக, செய்யாறு தாலுகா அலுவலகத்தில் 3 கட்ட போலீஸ் சோதனைக்கு பிறகே ஆட்சேபனை மனு அளித்த விவசாயிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் டி.எஸ்.பி.க்கள் குணசேகரன், செந்தில் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, கூட்டத்திற்கு வந்த எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த தேவன் என்ற விவசாயி மற்றும் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தை சேர்ந்த அத்தியபாடி அருள், முத்துக்குமார், முறையாறு சிவா ஆகிய 4 பேரும் திடீரென கைது செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை போட்டோ எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்ய முயன்றதால் 4 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், எதிர்ப்பு கருத்துகளை பதிவுசெய்த 58 விவசாயிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaisalemgreenexpressway

    Next Story
    ×