search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனுடன் கூட்டணி பற்றி இதுவரை பேசவில்லை- கமல்ஹாசன் பதில்
    X

    தினகரனுடன் கூட்டணி பற்றி இதுவரை பேசவில்லை- கமல்ஹாசன் பதில்

    தினகரனுடைய அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசவும் இல்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவும் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TTVDhinakaran
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் கோவையில் நடை பெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி :- எதற்காக இந்த பயிலரங்கம்?

    பதில் :- நிர்வாகிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட பயிலரங்கம் இது. வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினர். தேர்தலை எதிர்கொள்ளும் முறைகளையும் கூறினர்.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகராக இருந்த அவினாஷும் இங்கு வந்து பயிற்சியளித்தார். இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டோம். அடுத்த பயிலரங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

    கேள்வி :- தினகரன் கட்சியுடன் கூட்டணி என்று தகவல் வருகிறதே?

    பதில்:- தினகரனுடைய அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசவுமில்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவும் இல்லை.

    கே:- பாஜகவினர் மாற்றுக் கருத்துக்கு ஆற்றும் எதிர் வினை குறித்து?

    ப:- பா.ஜ.கவினர் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லக் கூடாது என நினைக்கின்றனர். அது, ஜனநாயக நாட்டில் ஒத்துவராத ஒரு வி‌ஷயம்.

    கே:- அ.தி.மு.கவினர் சப்பாணி என படத்தின் கேரக்டரைச் சொல்லி உங்களை கிண்டல் செய்கிறார்களே?

    ப:- பதிலுக்கு நாங்கள் ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள்.

    ப:- தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் இந்தப் பயிலரங்கில் ஆலோசித்து வருகிறோம். இடைத்தேர்தலைவிட பெரிய களத்தில் இறங்குவோம். அதற்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது. மாற்றம் மாற்றம் எனப் பேசிக் கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருகிறோம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும், பெட்ரோல்-டீசல் விற்கப்படும் விலைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இதை பார்க்கும் போது மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்பது அழுத்தமாக தெரிகிறது. தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் தற்போது சிறை வரை பரவி விட்டது.

    பின்னர் குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:-

    உங்களையும், எங்களையும் உரையாடுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நமக்கு வெட்டவெளி போதும். நாம் அங்கே நின்று பேசுவோம். நீங்கள் திரளுங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்துக் கொண்டு நீங்கள் சொல்கிற இடத்துக்கு வருவேன்.

    இளைஞர்கள் இளம் வயதில் அரசியலுக்கு வர வேண்டும். தற்போதைய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். கறைபடாத ஆட்சியும், மக்களுக்கு பயன்படும் அரசும் தான் இனி வர வேண்டும். வருங்காலத்தில் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியமானது. இளைய தலைமுறை நினைத்தால் அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    இளைஞர்கள் யாருக்கும் லஞ்சம் தரக்கூடாது. ஊழலை நீக்க நாம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் கமல்ஹாசன் பொள்ளாச்சியில் மக்களுடனான பயணத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது:-

    பொள்ளாச்சியில் மக்களை சந்திக்க விடாமல் இருக்க இடையூறுகள் செய்யப்பட்டது. மக்களை சந்தித்து பேச 10 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட 10 நிமிடங்கள் வேண்டாம், 3 நிமிடங்களில் கூட புரட்சி உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TTVDhinakaran
    Next Story
    ×