search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    வட தமிழகத்தில் காற்றுடன் மழை பெய்தும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுவதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #StormWarningCage
    தூத்துக்குடி:

    கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

    வட தமிழகத்தில் வானிலை சீராக இல்லாமல் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்தும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. #StormWarningCage

    Next Story
    ×