search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழலை கண்டித்து தஞ்சையில் தி.மு.க.- கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
    X

    குட்கா ஊழலை கண்டித்து தஞ்சையில் தி.மு.க.- கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

    குட்கா ஊழலை கண்டித்து தஞ்சையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #DMK #GutkhaScam

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பதவி விலகக்கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தங்கினார்.

    இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, ஒரத்தநாடு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், சட்டத் திருத்த குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, பாக்கியவதி தாண்டவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், தி.க. மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #GutkhaScam

    Next Story
    ×