என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரச்சாரத்தால் அமமுக வெற்றிப் பெறும்- புகழேந்தி
Byமாலை மலர்19 Sep 2018 10:20 AM GMT (Updated: 19 Sep 2018 10:20 AM GMT)
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே அமமுக வெற்றி பெற்று விடும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். #ADMK #OPS #EPS #AMMK #Pugalenthi
தஞ்சாவூர்:
தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. .
கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் இல்லை, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் டி.டி.வி.தினகரன் தான் என்று சொல்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். துரோகிகள் விலகுவார்கள். இரட்டை இலையையும், கழக கொடியையும் மீட்டெடுப்போம்.
தமிழகத்தில் பா.ஜ.னதா ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் பா.ஜ.னதா ஆட்சிக்கு தினகரன் தான் முடிவு கட்டுவார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் கோட்டை பகுதி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். #ADMK #OPS #EPS #Pugalenthi
தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. .
கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் இல்லை, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் டி.டி.வி.தினகரன் தான் என்று சொல்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். துரோகிகள் விலகுவார்கள். இரட்டை இலையையும், கழக கொடியையும் மீட்டெடுப்போம்.
தமிழகத்தில் பா.ஜ.னதா ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் பா.ஜ.னதா ஆட்சிக்கு தினகரன் தான் முடிவு கட்டுவார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் கோட்டை பகுதி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். #ADMK #OPS #EPS #Pugalenthi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X