search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயா, தேனா, பரோடா ஆகிய வங்கிகளை இணைக்கும் திட்டத்தை திரும்பபெற வேண்டும் - திருமாவளவன்
    X

    விஜயா, தேனா, பரோடா ஆகிய வங்கிகளை இணைக்கும் திட்டத்தை திரும்பபெற வேண்டும் - திருமாவளவன்

    விஜயா, தேனா, பரோடா ஆகிய வங்கிகளை இணைக்கும் திட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Thirumavalvan #BankofBaroda #DenaBank #VijayaBank

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நோக்கத்தை கெடுத்துவிடும்.

    கிராமபுறங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வங்கி சேவை கிடைப்பதை தடுத்துவிடும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விஜய் மல்லையாவை தப்பிக்கவிட்ட பிரச்சனையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

    தற்போது இணைக்கப்படும் மூன்று வங்கிகளில் இரண்டு வங்கிகள் கடுமையான நட்டத்தில் இயங்கி வருபவை. தேனா வங்கியின் வாராக் கடன் அளவு மிக அதிகமாக இருப்பதால் அது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது.

    அதை சற்றே லாபத்தில் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைப்பதால் அந்த வங்கியும் பின்னடைவுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே அதன் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கிவிட்டது.

    வங்கி ஊழியர்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#Thirumavalvan #BankofBaroda #DenaBank #VijayaBank

    Next Story
    ×