என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு
Byமாலை மலர்19 Sep 2018 6:41 AM GMT (Updated: 19 Sep 2018 6:41 AM GMT)
ஆத்தூர் அருகே இளம்பெண் தனது குழந்தைகளுக்கும் தீவைத்து, தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #selfimmolation
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர், அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி (26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்ற மகளும் உள்ளனர்.
கார்த்திக் ரிக் வண்டி வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பள பணத்தை மதுக்கடையில் கொண்டு கொடுத்து மது வாங்கி குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை என தெரிகிறது.
இதனால் மனைவி பூமதி, இப்படி நீங்கள் மது குடித்து விட்டு வந்தால் எப்படி? குடும்பத்தை நடத்துவது என தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வீட்டில் வைத்து அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கார்த்திக் கோபித்துக் கொண்டு வீட்டிலில் இருந்து வெளியே சென்று விட்டார்.
மனவேதனை அடைந்த பூமதி, கணவர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட மறுக்கிறார். சண்டையும் போடுகிறார். எனவே, தினம், தினம் வீட்டில் நிம்மதி இல்லாமல் வாழ்வதை விட, ஒரே அடியாக உயிரை விடுவதே மேல் என்று முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் தனது 2 குழந்தைகளையும் யாரும் கவனிக்க மாட்டார்களே? என்று நினைத்தும் அழுது புலம்பினார்.
எனவே 2 குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். இரவு 11.30 மணிக்கு வீட்டின் கதவை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு, பூமதி தனது மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தைகள் பூவரசன், நிலா ஆகியோர் மீது மண்எண்ணெயை மளமளவென ஊற்றி, தீ வைத்தார். பின்னர் தானும் உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீயின் கோரம் தாங்காமல் குழந்தைகள் அம்மா... அம்மா... வலிக்குது... வலிக்குது என கதறி அழுதபடி வீட்டில் அங்கும், இங்குமாக ஓடியது.
அழுகுரலை கேட்டதும் அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்கள் எழுந்து பதறியபடி ஓடி வந்து கார்த்திக் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்கள், சேலம் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேரையும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கிடம் மனைவியிடம் எதற்காக? தகராறில் ஈடுபட்டீர்கள், மனைவியை அடித்தீர்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண், தனது குழந்தைகளுக்கும் தீவைத்து, தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #selfimmolation
சேலம் மாவட்டம் ஆத்தூர், அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி (26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்ற மகளும் உள்ளனர்.
கார்த்திக் ரிக் வண்டி வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பள பணத்தை மதுக்கடையில் கொண்டு கொடுத்து மது வாங்கி குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை என தெரிகிறது.
இதனால் மனைவி பூமதி, இப்படி நீங்கள் மது குடித்து விட்டு வந்தால் எப்படி? குடும்பத்தை நடத்துவது என தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வீட்டில் வைத்து அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கார்த்திக் கோபித்துக் கொண்டு வீட்டிலில் இருந்து வெளியே சென்று விட்டார்.
மனவேதனை அடைந்த பூமதி, கணவர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட மறுக்கிறார். சண்டையும் போடுகிறார். எனவே, தினம், தினம் வீட்டில் நிம்மதி இல்லாமல் வாழ்வதை விட, ஒரே அடியாக உயிரை விடுவதே மேல் என்று முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் தனது 2 குழந்தைகளையும் யாரும் கவனிக்க மாட்டார்களே? என்று நினைத்தும் அழுது புலம்பினார்.
எனவே 2 குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். இரவு 11.30 மணிக்கு வீட்டின் கதவை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு, பூமதி தனது மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தைகள் பூவரசன், நிலா ஆகியோர் மீது மண்எண்ணெயை மளமளவென ஊற்றி, தீ வைத்தார். பின்னர் தானும் உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீயின் கோரம் தாங்காமல் குழந்தைகள் அம்மா... அம்மா... வலிக்குது... வலிக்குது என கதறி அழுதபடி வீட்டில் அங்கும், இங்குமாக ஓடியது.
அழுகுரலை கேட்டதும் அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்கள் எழுந்து பதறியபடி ஓடி வந்து கார்த்திக் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து பூமதியும், குழந்தைகள் இருவரையும் காப்பாற்றி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். நிலைமை மோசமாக இருந்ததால் அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பூமதி முகம், உடல் முழுவதும் கருகியுள்ளது.
மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்கள், சேலம் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேரையும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கிடம் மனைவியிடம் எதற்காக? தகராறில் ஈடுபட்டீர்கள், மனைவியை அடித்தீர்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண், தனது குழந்தைகளுக்கும் தீவைத்து, தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #selfimmolation
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X