என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி நினைவிடம் குறித்து அப்படி பேசியது ஏன்? - அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்
Byமாலை மலர்19 Sep 2018 5:54 AM GMT (Updated: 19 Sep 2018 5:54 AM GMT)
கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்தார். #KadamburRaju #KarunanidhiMemorial
தூத்துக்குடி:
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.
எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு. #KadamburRaju #KarunanidhiMemorial
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.
எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு. #KadamburRaju #KarunanidhiMemorial
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X