என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்19 Sep 2018 5:03 AM GMT (Updated: 19 Sep 2018 5:03 AM GMT)
மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 483 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 12-ந் தேதி 6 ஆயிரத்து 90 கன அடியாக இருந்த நீர்வரத்து 17-ந் தேதி 8 ஆயிரத்து 170 கன அடியானது.
நேற்று 8 ஆயிரத்து 483 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக பாசனத்திற்காக 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.
நேற்று 111.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 110.08 அடியாக சரிந்தது. இதனால் ஒரே நாளில் 1.34 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 12-ந் தேதி 6 ஆயிரத்து 90 கன அடியாக இருந்த நீர்வரத்து 17-ந் தேதி 8 ஆயிரத்து 170 கன அடியானது.
நேற்று 8 ஆயிரத்து 483 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக பாசனத்திற்காக 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.
நேற்று 111.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 110.08 அடியாக சரிந்தது. இதனால் ஒரே நாளில் 1.34 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X