search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட சிலைகள்
    X
    மீட்கப்பட்ட சிலைகள்

    செங்கல்பட்டு அருகே கோவிலில் திருட்டுபோன சிலைகள் மீட்பு

    செங்கல்பட்டு அருகே கோவிலில் திருட்டுபோன சிலைகள் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Idol
    செங்கல்பட்டு:

    சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த ஆப்பூரில் 120 ஆண்டு பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றனர்.

    இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆப்பூரில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் வலையை விரித்து மீன்பிடித்து போது ஒன்று சிக்கியது. அதை எடுத்து பார்த்தபோது அதற்குள் சாமி சிலைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அப்போது ஏரியில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கொள்ளைப் போன சிலைகள் என்பது தெரிய வந்தது.

    சாமி சிலைகளை திருடிய கொள்ளையர்கள் அதை லாரி டியூப்பில் வைத்து ஏரியில் வீசி சென்றுள்ளனர். சில நாட்கள் கழித்து ஏரியில் இருந்து சாமி சிலைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன் இவ்வாறு செய்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் டி.எஸ்.பி. கந்தன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, வருவாய் ஆய்வாளர் கவிதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சாமி சிலைகளுக்கு தீபஆராதனை காட்டி பூஜை செய்து வழிபட்டனர்.

    அதன்பின்னர் சாமி சிலைகள் செங்கல்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு இந்த சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் சாமி சிலைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பழமை வாய்ந்த கல்யாண வரதராஜபெருமாள் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே இக்கோவிலை பராமரிக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். #Idol
    Next Story
    ×