search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னிலம் அருகே கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற புத்தாற்றில் தண்ணீர் விடக்கோரி 15 கிராம மக்கள் மறியல்
    X

    நன்னிலம் அருகே கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற புத்தாற்றில் தண்ணீர் விடக்கோரி 15 கிராம மக்கள் மறியல்

    நன்னிலம் அருகே கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற புத்தாற்றில் தண்ணீர் விடக்கோரி 15 கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். #Farmers

    பேரளம்:

    நன்னிலம் அருகே ஆற்றில் தண்ணீர் விடக்கோரி 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஓடும் புத்தாற்று மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்காக மேட்டுரில் தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் கடைமடை பகுதியான புத்தாற்றில் இதுவரை தண்ணீர் விடவில்லை என்று விசாயிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் கருகும் சம்பா பயிர்களை காக்க புத்தாற்றில் உடனடியாக தண்ணீர் விடக்கோரி ஆண்டிப்பந்தல், வடகரை, மூலங்குடி, மகிழஞ்சேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இன்று காலை ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தல் என்ற இடத்தில் புத்தாற்று பாலத்தில் காலை 8.30 மணிக்கு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலுக்கு பா.ம.க., உழவர் பேரியக்க மாவட்ட செய்லாளர் சக்திவேல், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்து நன்னிலம் தாசில்தார் பரஞ்சோதி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்; காவிரி நீர் திறப்பை நம்பி இப்பகுதியில் சம்பா சாகுபடியை தொடங்கினோம். ஆனால் இப்பகுதி புத்தாற்றில் இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இல்லாததால் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. இதுபற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. புத்தாற்றில் தண்ணீர் வீடும் வரை மறியல் தொடரும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்; இன்று மாலை 5 மணிக்குள் புத்தாற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    Next Story
    ×