search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலை திட்டத்தில் தமிழக அரசு விதி மீறல்களை செய்கிறது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு
    X

    8 வழி சாலை திட்டத்தில் தமிழக அரசு விதி மீறல்களை செய்கிறது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு

    8 வழி சாலை திட்டத்தில் தமிழக அரசு கோர்ட்டு உத்தரவினை மீறி விதி மீறல்களை செய்வதாக ஜி.கே.வாசன் குற்றச்சாட்டியுள்ளார். #GkVasan
    கரூர்:

    கரூர் வெங்கமேடு பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவினை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களை செய்கிறது. இதை அங்கிருக்கும் மக்களே முழுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் ஜனநாயகத்திற்கு நல்லதாக இருக்கும். 8 வழி சாலையை 6 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து இறுதி முடிவு வந்த பின்னரே கருத்து கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. நாட்ராயன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர், மாநில நெசவாளர் அணி தலைவர் அக்னி ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர். #GkVasan
    Next Story
    ×