search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை
    X

    அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை

    மதுரையில் நாளை அண்ணாவின் 110-வது பிறந்தநாளை யொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார். #ADMK #Sellurraju
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந்தேதி) காலை 9 மணிக்கு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Sellurraju
    Next Story
    ×