search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான சந்தான கிருஷ்ணன்.
    X
    விபத்தில் பலியான சந்தான கிருஷ்ணன்.

    கும்மிடிப்பூண்டி அருகே வேன் மோதி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி பலி

    கும்மிடிப்பூண்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது வேன் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் எதிரே வசித்து வந்தவர் சந்தானக் கிருஷ்ணன்(வயது82). ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி. இவரது மனைவி அருணா. மகன் சதிஷ் (42).

    நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சந்தானக் கிருஷ்ணன், அவரது மனைவி அருணா, மகன் சதிஷ் ஆகிய 3 பேரும் கடக்க முயன்றனர்.

    அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி வந்த மினி வேன் திடீரென சந்தானக்கிருஷ்ணன் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. இதனைக்கண்ட சதிஷ், தந்தையை காப்பாற்ற முயன்றார்.

    இதில் அவர்கள் 2 பேர் மீது வேன் மோதியது. படுகாயம் அடைந்த இருவரும் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானக்கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சதீசுக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து மினி வேன் டிரைவர் ஆரம்பாக்கத்தை அடுத்த பாட்டைகுப்பம் கிராமத்தைச்சேர்ந்த பிரேம் என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×