என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவரை கொன்ற பெண்
Byமாலை மலர்12 Sep 2018 5:11 AM GMT (Updated: 12 Sep 2018 5:11 AM GMT)
கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கிரிக்கெட் மட்டையால் கணவரை மனைவி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் ஞானம் (வயது 45). டிரைவர்.
இவரது மனைவி உமா தேவி(39). இவர் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மாலினி(16) என்ற மகளும், பெல்வின்(7) என்ற மகனும் உள்ளனர்.
மாலினி கோவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1, பெல்வின் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஞானத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. மனைவியிடம் இருந்து பணத்தை பறித்து சென்று குடித்து விட்டு, போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.
நேற்று இரவும் ஞானம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் உமாதேவி கண்டித்துள்ளார். மனைவியிடம் தகராறு செய்த ஞானம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தூக்க முயன்றார்.
குடிபோதையில் மகனை தூக்கியதை பார்த்த உமா தேவி கணவரை எச்சரித்தார். அதன்பிறகும் ஞானம் கேட்காமல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உமாதேவி அங்கு கிடந்த மகனின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவரை அடித்தார். இதில் அவரின் பின்தலை, முகத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி ஆம்புலன்சு வரவழைத்து ஞானத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கிரிக்கெட்மட்டையால் அடித்ததை உமாதேவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது கணவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்தார். அவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் தராததால் நான் வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். நேற்று இரவும் போதையில் வந்த அவர் மகனை தூக்கினார். அவர் மகனை கீழே போட்டு அவனுக்கு அடி பட்டு விடக்கூடாது என்பதால் மகனை விட்டு விடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே கீழே கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவரை அடித்தேன்.
இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் ஞானம் (வயது 45). டிரைவர்.
இவரது மனைவி உமா தேவி(39). இவர் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மாலினி(16) என்ற மகளும், பெல்வின்(7) என்ற மகனும் உள்ளனர்.
மாலினி கோவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1, பெல்வின் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஞானத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. மனைவியிடம் இருந்து பணத்தை பறித்து சென்று குடித்து விட்டு, போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.
நேற்று இரவும் ஞானம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் உமாதேவி கண்டித்துள்ளார். மனைவியிடம் தகராறு செய்த ஞானம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தூக்க முயன்றார்.
குடிபோதையில் மகனை தூக்கியதை பார்த்த உமா தேவி கணவரை எச்சரித்தார். அதன்பிறகும் ஞானம் கேட்காமல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உமாதேவி அங்கு கிடந்த மகனின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவரை அடித்தார். இதில் அவரின் பின்தலை, முகத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி ஆம்புலன்சு வரவழைத்து ஞானத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கிரிக்கெட்மட்டையால் அடித்ததை உமாதேவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது கணவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்தார். அவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் தராததால் நான் வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். நேற்று இரவும் போதையில் வந்த அவர் மகனை தூக்கினார். அவர் மகனை கீழே போட்டு அவனுக்கு அடி பட்டு விடக்கூடாது என்பதால் மகனை விட்டு விடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே கீழே கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவரை அடித்தேன்.
இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X