search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்- டிடிவி தினகரன்
    X

    இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்- டிடிவி தினகரன்

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தயாராக உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran
    காரைக்குடி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் காரைக்குடியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். ஏழை எளிய சாதாரண மக்கள் வாழ வேண்டுமானால் பெட்ரோல் டீசல் விலை குறைய வேண்டும்.

    உலகத்தமிழர்கள் அனைவரும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். தமிழக கவர்னர் அதை நிறைவேற்ற வேண்டும்.

    தமிழ்நாட்டில் நடப்பது, மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது தேவையற்ற அரசியல்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    Next Story
    ×