search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணத்துடன் 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
    X

    சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணத்துடன் 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட இருந்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது ஒரு வாலிபரின் பின்புற இடுப்பு பகுதி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர்.

    அப்போது யூரோ நோட்டுக்களை இடுப்பில் சுற்றி வைத்து டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது பெயர் சரவணன் (28). இலங்கையை சேர்ந்தவர்.

    இதேபோல் நேற்று நள்ளிரவில் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசின் (33) என்பவர் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டுக்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். #ChennaiAirport
    Next Story
    ×