search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.
    X
    வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும்.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake
    Next Story
    ×