search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்தம் காரணமாக கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.
    X
    வேலை நிறுத்தம் காரணமாக கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.

    சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரி 2-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

    சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடிப்பதும் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவித்தாலும் பறிமுதல் செய்யப்பட்ட 168 விசைப்படகுகளை இலங்கை அரசு விடுவிக்க காலதாமதம் செய்கிறது.

    இந்த நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகளை இலங்கை நீதிமன்றம் நாட்டுடமையாக்கியது. இது ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ராமேசுவரத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். ஏற்கனவே அங்கு எந்த பராமரிப்பு இன்றியும் உள்ள 168 விசைப்படகுகளை காலதாமதமின்றி விடுவிப்பதோடு சேதமான படகுகளுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

    இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் மீனவர்களின் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் நாங்கள் கடலுக்கு உயிர் பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அடிக்கடி இதுபோன்ற வேலை நிறுத்தம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.  #RameswaramFishermen

    Next Story
    ×