search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.
    X
    வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.

    வீராணம் ஏரியிலிருந்து இன்று சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து கடந்தமாதம் 14-ந்தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணை வழியாக கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,450 கனஅடி தண் ணீர் வந்தது. இன்று 1,350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றையவிட 100 கனஅடி குறைவாகும். இருப்பினும் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டுவருகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் விவசாயத்துக்கு திறந்துவிடப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து கடந்தமாதம் 14-ந்தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது.

    இன்று 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றையவிட 2 கன அடி கூடுதலாகும். #VeeranamLake
    Next Story
    ×