search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து கோவில் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா உண்ணாவிரதம்
    X

    இந்து கோவில் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா உண்ணாவிரதம்

    தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #BJP #HRaja

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை அமல்படுத்த கோரி பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று வள்ளுவர்கோட்டத்தில் நடந்தது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், எஸ்.கே.கார் வேந்தன், அர்ஜுன் சம்பத், டி.ஆர். ரமேஷ் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×