search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு
    X

    தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு

    தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #ministerudayakumar

    ராஜபாளையம்:

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சாத்தூரில் தொடங்கிய சைக்கிள் பேரணி ராஜபாளையம் சென்றது. பேரணியில் வந்த அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 137 பயனாளிகளுக்கு ரூ. 82.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட புலித்தேவன் 303-வது ஆண்டு விழாவில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளோம். அ.தி.மு.க. மனிதனால் ஏற்படுத்தப்பட்டதல்ல. எம்.ஜி.ஆர் என்ற புனிதனால் தொடங்கப்பட்டது. இதை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.கவுக்கு வீழ்ச்சி 1 சதவிகிதம் என்றால், வளர்ச்சி 99 சதவிகிதம்.

    அம்மா வாக்கு தெய்வ வாக்கு. உங்கள் கட்சி அழிந்து விடும் என விஜயகாந்த் சட்ட மன்றத்தில் சாபமிட்டார். ஆனால் தற்போது அவர் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அம்மா சொன்னது போல் அவருக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆளும்.

    மற்ற கட்சி போல உருவத்தை பார்த்து பதவி கொடுக்கப்படுவதில்லை. உழைத்தால் தான் முன்னேற முடியும். படிப்படியாக மட்டுமே முன்னேற முடியும். கட்சியில் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டது என எதிர் கட்சியினர் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை உடைத்து அ.தி.மு.க. கட்சியின் சக்தியை காட்டவே இந்த ஓராண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உயதகுமார், எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை போற்றும், வணங்கும் தலைமை அ.தி.மு.க.வின் உடையது. அந்த தலைமையை அம்மா வளர்த்தெடுத்தார். தற்போது அதை மருது சகோதரர்களான ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்டி காத்து வருகின்றனர்.

    எதிரணியினர் மாற்றுவோம் என கூறுகின்றனர். அ.தி.மு.க. என்ன பாட புத்தகமா ? மாற்றுவதற்கு ? பலர் முன்னிலையில் புரட்சி தலைவி அம்மாவின் அரசு 17-வது மாதம் முடிந்து 18- வது மாதத்தில் அடி எடுத்து வைக்கிறது.

    இந்த 17 மாத கால ஆட்சியில் ரூ. 23 ஆயிரம் கோடியில், 40 ஆயிரம் திட்டங்களை மக்களுக்காக அர்பணித்திருக்கும் அ.தி.மு.க. அரசின் இந்த சாதனைகளை யாரும் மறுக்க முடியுமா ?

    239 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காவிரி பிரச்சினையை, அம்மாவின் அருளாசியோடு சட்ட போராட்டத்தில் மருது சகோதரர்கள் ஆனவர்கள் மாபெரும் வெற்றியை உச்ச நீதி மன்றத்தில் பெற்றுள்ளனர்.

    அண்டை மாநிலங்களில் இல்லாத எய்ம்ஸ் மருத்துவ மனை தமிழகத்தில் வர வேண்டும் என விதை விதைத்தார் அம்மா. ரூ. 2 ஆயிரம் கோடியில் அதை சத்தமில்லாமல் மருது சகோதரர்கள் அறிவிப்பாக பெற்று தந்துள்ளனர்.

    பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தலை நகரம் என சென்னை தேசிய விருதை பெற்றுள்ளது. இது போல மக்கள் நல்வாழ்வு துறை, விவசாய துறையில் பரிசு, பள்ளி கல்வி துறையில் மறு மலர்ச்சி போன்ற நலத்திட்டங்களை வழங்கியது அம்மாவின் அரசு.

    ஆவின் பால் இது வரை இந்தியாவிற்குள் மட்டும் கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்போது ஆவின் பால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அம்மாவின் அரசின் சாதனைகளை அமெரிக்கா என்ன ? நிலவு வரை எடுத்து செல்வோம். ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #ministerudayakumar

    Next Story
    ×