search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் நவீன மொபைல்-ஆப் வசதி
    X

    மெட்ரோ ரெயில் நவீன மொபைல்-ஆப் வசதி

    பயணிகள் குறைகளை உடனடியாக தீர்க்க மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக நவீன மொபைல்-ஆப் வசதி அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பொது மக்கள் - பயணிகள் இடையே மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விரிவுப் படுத்தப்பட்டு வருகிறது.

    மெட்ரோ ரெயிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், குறைகள் குறித்து உடனடியாக தீர்க்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தற்போது நவீன மொபைல்-ஆப் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் போன், டேப், லேப்டாப்களில் இந்த வசதிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    பயணத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள், குறைகளை இதில் பதிவு செய்யலாம். குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்.

    இது குறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிகள் குறைகளை தீர்க்க புதிதாக நவீன மொபைல்-ஆப் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், குறைகளை இந்த ‘ஆப்’ மூலம் பதிவு செய்யலாம்.

    அதிகாரிகள் குழு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்த்து வைப்பார்கள். இதன் மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் பாதுகாப்பான பயணம் செய்து பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×