search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக சரிவு

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் இருந்தது. இன்று படிப்படியாக சரிந்து காலை 8 மணிக்கு 23 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணை களுக்கு நீர் வரத்து அதிகமாகியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    திறந்து விடப்பட்ட நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடையும். ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் இருந்தது. இன்று படிப்படியாக சரிந்து காலை 8 மணிக்கு 23 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இன்று 51-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery

    Next Story
    ×