என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவோணம் அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாலை மறியல்
திருவோணம்:
திருவோணம் வட்டார விவசாய நலச்சங்கம் சார்பில் ஊரணிபுரம், திருவோணம், பேராவூரணி, கடைமடை பகுதிவரை பாசன வாய்க்கால் ஏரி, குளங்களை தூர்வாராததால் தண்ணீர் பாசனத்திற்கு வராததை கண்டித்து ஊரணிபுரம் கடை வீதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சங்க ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமை தங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், ஒரத்தநாடு டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலை கைவிடும் படி கூறினர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாணும்படி கேட்டுக் கொண்டனர்.
இதைதொடர்ந்து பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர்கள் மதியழகன், திருவேணி, ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது திருவோணம் பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வாரி கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்