search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓணம் பண்டிகை - பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
    X

    ஓணம் பண்டிகை - பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

    ஆண்டுதோறும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #OnamFestival
    நாகர்கோவில்:

    ஓணம் பண்டிகையையொட்டி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் திருவோண பண்டிகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாமன அவதாரம் எடுத்து வந்த மகாவிஷ்ணுவோடு ஐக்கியமாகிவிட்ட மகாபலி சக்கரவர்த்தி இந்த நாளில் தன் மக்கள் வாழும் சிறப்பை காணவேண்டும் என்ற ஆசி பெற்ற நாளே ஓணத் திருநாள் ஆகும். மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தன் மக்கள் அதில் இருந்து விடுபட்டு வரும் காலங்கள் மகிழ்ச்சியாக அமைய அவர் மூலமாக வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #OnamFestival

    Next Story
    ×