search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆற்று உபரி நீரால் குளம்- குட்டைகளை நிரப்ப வேண்டும் - ஈஸ்வரன்
    X

    பவானி ஆற்று உபரி நீரால் குளம்- குட்டைகளை நிரப்ப வேண்டும் - ஈஸ்வரன்

    பவானி ஆற்று உபரி நீரால் குளம் மற்றும் குட்டைகளை நிரப்ப வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    பவானி:

    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பவானி ஆற்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார்.

    அதன் பிறகு ஈஸ்வரன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 5 நாட்களாக வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகி போய் விட்டது.

    பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை கிளை வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட உட் பகுதியில் உள்ள குளம்- குட்டைகளை நிரப்ப வேண்டும். இதற்கான திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றினால் உபரி நீர் பாதிப்பு குறையும். கடலில் வீணாக சென்று கலக்காமல் நிலத்தடி நீரம் அதிகமாகி தண்ணீர் பஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்படும்.

    இப்படிப்பட்ட திட்டங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் வாக்குறுதிகளாகவே உள்ளது.

    இன்னொரு முறை உபரி நீர் வெளியேறாமல் பயன்படுகிற உபயோகப்படுத்துகிற நோக்கிலேயே திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

    ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜா, மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் மலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×