search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

    கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், கத்தரிக்காய் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. #KoyambeduMarket

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. ஆடி மாதம் முடிந்து ஆவணி முகூர்த்த நாட்கள் தொடங்கி உள்ளதால் தேவை அதிகரிப்பால் காய்கறி விலை உயர தொடங்கி உள்ளன.

    கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது ரூ.55-க்கு விற்கப்படுகிறது. இதே போல ரூ.25-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.35யாக உயர்ந்து உள்ளது.

    அதிகபட்சமாக இஞ்சி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆனது. மற்ற காய்கறி விலை (கிலோவில்) விபரம் வருமாறு:-

    காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெருமளவு காய்கறிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் காய்கறி வரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன.

    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் அங்கிருந்து இஞ்சி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இஞ்சி விலை அதிகரித்து இருக்கிறது. தற்போது ஆவணி மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருமண முகூர்த்த நாள் அதிகம் என்பதால் காய்கறியின் தேவை அதிகரித்து விலை உயர்ந்து உள்ளன. இனிவரும் நாட்களில் காய்கறி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×