search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் நாளை மூப்பனார் பிறந்தநாள்: விவசாயிகள் தினமாக கொண்டாட்டம்- ஜி.கே.வாசன்
    X

    கோவையில் நாளை மூப்பனார் பிறந்தநாள்: விவசாயிகள் தினமாக கொண்டாட்டம்- ஜி.கே.வாசன்

    மறைந்த மூப்பனாரின் பிறந்த நாளான நாளை த.மா.கா.வினர் விவசாயிகள் தினமாக கொண்டாடி வரும் நிலையில் ஜிகே வாசன் தலைமையில் நாளை கோவையில் விவசாயிகள் தினம் மாநாடாக நடைபெறுகிறது. #GKVasan #moopanar
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மக்கள் தலைவர் மூப்பனாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 19-ந் தேதியை ‘விவசாயிகள் தினமாக’ கோவை, சிங்காநல்லூரில் கொண்டாடுகின்றனர்.

    தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக, பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டவராக, அரசியலில் நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத் தன்மை கொண்டவராக விளங்கியவர் மூப்பனார்.

    தமிழக விவசாயத்திற்காக, விவசாயிகளுக்காக அரும்பாடுபட்ட மக்கள் தலைவர் மறைந்த மூப்பனாரின் பிறந்த நாளான நாளை த.மா.கா.வினர் ஆண்டு தோறும் விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாளை (ஞாயிறு) மூப்பனாரின் 87-வது பிறந்த நாள் விவசாயிகள் தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    எனது தலைமையில் நாளை மாலை கோவை, சிங்காநல்லூரில் விவசாயிகள் தினம் மாநாடாக நடைபெறுகிறது.

    இதில் த.மா.கா.வின் நிர்வாகிகள், துணை அமைப்பினர், தொண்டர்களுடன் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மக்கள் தலைவர் புகழ் பாடுவோம். வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GKVasan #moopanar
    Next Story
    ×