என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய வரைவு திட்டத்துடன் மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
Byமாலை மலர்17 Aug 2018 8:38 AM GMT (Updated: 17 Aug 2018 8:38 AM GMT)
புதிய வரைவுத் திட்டத்துடன் மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்று சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர்:
சென்னை துறைமுக வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அவர் பேசியதாவது:-
துறைமுகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவிகரமாக இருக்கும் மதுரவாயல் உயர்நிலை மேம்பால திட்டம் (பறக்கும் சாலை) கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளதையடுத்து சீரமைக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய விரிவான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் பாலப்பணிகள் தொடங்கும்.
கடந்த நிதியாண்டில் 51.88 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ள சென்னை துறைமுகம் சுமார் ரூ. 953 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரை சுமார் 18 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. மேலும் 10 ஆண்டுகளுக்கு கார்களை சென்னை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Maduravoyal #Flyover
சென்னை துறைமுக வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அவர் பேசியதாவது:-
துறைமுகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவிகரமாக இருக்கும் மதுரவாயல் உயர்நிலை மேம்பால திட்டம் (பறக்கும் சாலை) கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளதையடுத்து சீரமைக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய விரிவான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் பாலப்பணிகள் தொடங்கும்.
கடந்த நிதியாண்டில் 51.88 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ள சென்னை துறைமுகம் சுமார் ரூ. 953 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரை சுமார் 18 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. மேலும் 10 ஆண்டுகளுக்கு கார்களை சென்னை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Maduravoyal #Flyover
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X