search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.
    X
    வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 70 கனஅடி தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து காவிரி உபரி நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1046 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 922 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.85 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 46.95 கனஅடியாக உயர்ந்து உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது அதிகரித்து 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும்.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    Next Story
    ×