search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட பாலமுருகன்
    X
    கொலை செய்யப்பட்ட பாலமுருகன்

    அச்சரப்பாக்கத்தில் தினகரன் கட்சி பிரமுகர் கொலையில் உறவினர் உள்பட 5 பேர் சிக்கினர்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளர் கொலையில் உறவினர் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார். அச்சரப்பாக்கத்தில் டீக்கடையும் நடத்தி வந்தார்.

    நேற்று அதிகாலை பால முருகன் டீக்கடையை திறந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் இறந்தார்.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக பாலமுருகனின் உறவினரான மகேஷ் உள்பட 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காந்தி நகரில் உள்ள கோவில் திருவிழா தொடர்பாக பால முருகனுக்கும், சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் பால முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திண்டிவனத்தை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. கூலிப்படையினரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×