search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழைக்கு 23 பேர் பலி- கேரள முதல்-மந்திரியுடன் நாராயணசாமி டெலிபோனில் பேச்சு
    X

    பலத்த மழைக்கு 23 பேர் பலி- கேரள முதல்-மந்திரியுடன் நாராயணசாமி டெலிபோனில் பேச்சு

    கேரளாவில் பலத்த மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். அனைத்து உதவிகளும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாக கேரள முதல்-மந்திரியுடன் நாராயணசாமி டெலிபோனில் பேசியுள்ளார். #keralaheavyrain #narayanasamy

    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலத்த மழையினால் ஏராளமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுடன் டெலிபோனில் பேசினார்.

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்தில் புதுவையும் பங்கேற்பதாகவும், மேலும் வெள்ள சேதங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். #keralaheavyrain #narayanasamy

    Next Story
    ×