search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் போராட்டம் - 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
    X

    ஸ்டெர்லைட் போராட்டம் - 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

    தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiSterlite #SterliteProtest #SterliteCases
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.



    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு மற்றும் போராட்டம் தொடர்பாக மே 22ம் தேதி பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். 173 வழக்குகளையும் குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி குற்ற வழக்கு எண் 191-ஐ தவிர்த்து மற்ற வழக்குகளில் யாரையும் போலீசார் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiSterlite #SterliteProtest #SterliteCases

    Next Story
    ×