என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண் தெரியாத மூதாட்டியின் மருத்துவ செலவை ஏற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
Byமாலை மலர்30 July 2018 11:01 AM GMT (Updated: 30 July 2018 11:01 AM GMT)
சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மூதாட்டியின் ஒருவரின் கண் அறுவை சிகிச்சை செலவு தொகையை ஏற்றுக் கொண்டார்.
சிவகாசி:
சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் நேரில் மனுக்கொடுத்து குறைகளை தெரிவித்தனர்.
பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் குறைகளையும் கேட்டறிந்தார். பட்டாசு பெண் தொழிலாளி ஒருவருக்கு மருத்துவ செலவிற்கு உதவித் தொகை வழங்கினார். கண்கள் தெரியாத மூதாட்டி ஒருவர் மனு கொடுத்தார். மூதாட்டியிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், தான் சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்றும் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்றும் அமைச்சரிடம் தெரிவித்தார்.
உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையை தொடர்பு கொண்ட அமைச்சர் மூதாட்டிக்கு வேண்டிய அறுவை சிகிக்சையை மேற்கொள்ளுமாறும் அதற்கான செலவு தொகையை தானே ஏற்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கினார். மூதாட்டி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் நேரில் மனுக்கொடுத்து குறைகளை தெரிவித்தனர்.
பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் குறைகளையும் கேட்டறிந்தார். பட்டாசு பெண் தொழிலாளி ஒருவருக்கு மருத்துவ செலவிற்கு உதவித் தொகை வழங்கினார். கண்கள் தெரியாத மூதாட்டி ஒருவர் மனு கொடுத்தார். மூதாட்டியிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், தான் சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்றும் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்றும் அமைச்சரிடம் தெரிவித்தார்.
உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையை தொடர்பு கொண்ட அமைச்சர் மூதாட்டிக்கு வேண்டிய அறுவை சிகிக்சையை மேற்கொள்ளுமாறும் அதற்கான செலவு தொகையை தானே ஏற்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கினார். மூதாட்டி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X