search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாத்துரை மகனின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள்
    X

    செய்யாத்துரை மகனின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள்

    செய்யாத்துரை மகனின் நண்பர் வீட்டில் சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித்துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். #ITRaid #SPK

    காரைக்குடி:

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. செய்யாத்துரை மற்றும் அவரது மகனின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் செய்யாத் துரையின் மகன் நாகராஜின் நண்பர் கிருஷ்ணன் என்பவரது வீடு காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு 4-வது வீதியில் உள்ளது.

    இங்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித் துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது கிருஷ்ணனின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #ITRaid #SPK

    Next Story
    ×