என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி 2 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Byமாலை மலர்23 July 2018 7:12 AM GMT (Updated: 23 July 2018 7:12 AM GMT)
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி 2 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். #thoothukudiProtest #Sterlite
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில்லாமல் வருமானமின்றி தவிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். #thoothukudiProtest #Sterlite
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில்லாமல் வருமானமின்றி தவிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். #thoothukudiProtest #Sterlite
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X