என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி தர வரிசை பட்டியல் வெளியீடு
Byமாலை மலர்20 July 2018 11:18 AM GMT (Updated: 20 July 2018 11:18 AM GMT)
கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
கோவை:
கோவை தடாகம் ரோட்டில் அரசு தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த தர வரிசை பட்டியலை அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளருமான கே. தாமரை வெளியிட்டார்.
இதனை ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் பெற்று கொண்டார்.
இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சென்னை மாணவர் ஹரீஷ் 67. 667 மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ராகுல் பாபு 61.667 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.
எம்.பி.ஏ. பிரிவில் சென்னை மாணவி கார்த்திகா 80.667 மதிப்பெண்ணுடன் முதலிடமும், பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 80.000 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், ஈரோடு மாணவி கார்த்திகா 78.333 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்தனர்.
எம்.சி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,552 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
எம்.பி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6,255 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
டான்செட் தேர்வு எழுதி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு கடைசி நாளில் கலந்தாய்வு நடக்கிறது.
கோவை தடாகம் ரோட்டில் அரசு தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த தர வரிசை பட்டியலை அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளருமான கே. தாமரை வெளியிட்டார்.
இதனை ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் பெற்று கொண்டார்.
இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சென்னை மாணவர் ஹரீஷ் 67. 667 மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ராகுல் பாபு 61.667 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.
எம்.பி.ஏ. பிரிவில் சென்னை மாணவி கார்த்திகா 80.667 மதிப்பெண்ணுடன் முதலிடமும், பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 80.000 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், ஈரோடு மாணவி கார்த்திகா 78.333 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்தனர்.
எம்.சி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,552 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
எம்.பி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6,255 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
டான்செட் தேர்வு எழுதி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு கடைசி நாளில் கலந்தாய்வு நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X