என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரி அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்20 July 2018 5:29 AM GMT (Updated: 20 July 2018 5:29 AM GMT)
தருமபுரி அருகே நள்ளிரவில் 2 மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வருமான வரித்துறை சோதனை சாவடி அருகே தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சோதனை சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும் வந்தது.
அப்போது அங்கு நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த 2 மினிலாரிகளையும் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரிகளில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 லாரிகளில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகரைச் சேர்ந்த டிரைவர் புஷ்பராஜ் (வயது 32) என்பவரையும், போச்சம்பள்ளி அணைகொடி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (36) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் 2 மினிலாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை 309 அட்டை பெட்டிகளில் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மதன்பாய் என்பவரிடம் இருந்து இந்த குட்கா பொருட்களை லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் 2 மினி லாரிகளின் டிரைவர்களை கைது செய்து 309 அட்டைபெட்டிகளில் இருந்த 7 லட்சத்து 24 ஆயிரத்து 500 குட்கா பாக்கெட்டுகளையும், 2 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள மதன்பாய் மற்றும் மினிலாரிகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்கள் மதுரையில் எந்த வியாபாரிக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தனர் என்றும், அதன் உரிமையாளர் யார்? என்ற விபரம் குறித்தும் போலீசார் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை மினிலாரிகளில் கடத்திவந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வருமான வரித்துறை சோதனை சாவடி அருகே தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சோதனை சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும் வந்தது.
அப்போது அங்கு நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த 2 மினிலாரிகளையும் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரிகளில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 லாரிகளில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகரைச் சேர்ந்த டிரைவர் புஷ்பராஜ் (வயது 32) என்பவரையும், போச்சம்பள்ளி அணைகொடி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (36) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் 2 மினிலாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை 309 அட்டை பெட்டிகளில் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மதன்பாய் என்பவரிடம் இருந்து இந்த குட்கா பொருட்களை லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் 2 மினி லாரிகளின் டிரைவர்களை கைது செய்து 309 அட்டைபெட்டிகளில் இருந்த 7 லட்சத்து 24 ஆயிரத்து 500 குட்கா பாக்கெட்டுகளையும், 2 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள மதன்பாய் மற்றும் மினிலாரிகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்கள் மதுரையில் எந்த வியாபாரிக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தனர் என்றும், அதன் உரிமையாளர் யார்? என்ற விபரம் குறித்தும் போலீசார் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை மினிலாரிகளில் கடத்திவந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X