search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் நாய்க்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கு
    X

    ஜெயங்கொண்டம் நாய்க்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கு

    ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே நாய்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கூத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குட்டி போட்டு 5 நாட்களே ஆன கண் திறக்காத நாய்க்குட்டியை குரங்கு ஒன்று 3 நாட்களாக தூக்கி கொண்டு தனது குழந்தையை போல் பார்த்து கொள்கிறது. மேலும் அந்த குட்டியுடன் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அப்பகுதியில் உள்ள வீட்டு மாடி, ஓட்டு வீடுகளில் மேலே நாய்க்குட்டியை வைத்து கொண்டு, அந்த குரங்கு சுற்றி வருகிறது. மேலும் அந்த நாய் குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து, மடியில் போட்டு பேன் பார்க்கிறது. இதையடுத்து ஒரு குழந்தையை போல் நாய்க்குட்டியை தோளில் போட்டு தூங்க வைப்பதும், நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிவது, மரங்களில் தாவி கொண்டிருக்கின்றது. மேலும் அந்த குரங்கு, நாய்க்குட்டியை பார்த்து கொள்ளும் பாவனைகளை மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றார்கள்.

    இந்நிலையில் அந்த குரங்கிற்கும், கிராம மக்கள் தினமும் ரொட்டி மற்றும் சாதம் கொடுத்து ஆச்சரியமாக பார்த்து ரசித்து வருகின்றனர். விலங்குகளுக்குள் இருக்கும் நேயம் மனிதர்களிடத்தில் இருப்பதில்லை. தாயை பிரிந்து தவிக்கும் கண் திறக்காத நாய்க்குட்டியை அனைத்தபடி தாய்பால் மற்றும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கும் குரங்கு ஒன்று தா.பழூர் பகுதியில் சுற்றி வருவதை பொதுமக்கள் பார்த்து அதிசயித்து வருகின்றனர். குரங்கும், நாயும் எதிரிகளாக இருந்த காலம் மாறி தற்போது மனிதனுக்கு மாறாக மனித நேயத்துடன் இனக்கமாகவும் இருக்கின்றன. இதனை பார்த்த பின் மனிதர்கள் மத்தியில் சாதி, மதம், இனம் கடந்த மனித நேயம் காணப்படுமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வியந்து பார்க்கின்றனர். 
    Next Story
    ×