search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் சேர்க்கைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
    X

    கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் சேர்க்கைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணியாளர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
    மதுரை:

    நெல்லை மாவட்டம் ராதபுரம் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவு மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    “நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

    கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை வழங்கினர்.

    கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைய நிலம் அளித்த பொதுமக்களுக்கு அனல்மின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என 12.2.1999 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்நிலையில் கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவை என இந்தாண்டு ஏப்ரல் 18-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையில் நிலம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.

    கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை அளிக்கப்படும் என்ற 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்காமல் சி, டி பிரிவில் வேலையாட்கள் தேவை என ஏப்ரல் 18 ல் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    மேலும் கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தபடி நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம் ஏ.எம்.பஷீர் முகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தபடி சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த இடைக்கால தடை விதித்தும் இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×