search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை லாட்ஜில் புகுந்து ரஷிய இளம்பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்
    X

    திருவண்ணாமலை லாட்ஜில் புகுந்து ரஷிய இளம்பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்

    திருவண்ணாமலையில் விடுதிக்குள் புகுந்து ரஷிய இளம்பெண்ணை தாக்கி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    ரஷிய நாட்டை சேர்ந்த திருமணமாகாத 21 வயது இளம்பெண், இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக, கடந்த 12-ம் தேதி மும்பை வந்தார். அங்கு இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார். கிரிவலப் பாதையில் யோகிராம் சுரத் குமார் ஆசிரமத்தின் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமத்தை சுற்றி பார்த்தார். கடந்த 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுதி அறைக்குள் சென்ற ரஷிய இளம்பெண் நேற்று வரை வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    லாட்ஜ் உரிமையாளர் விரைந்து வந்து அறையை திறந்து பார்த்தார். அப்போது, ரஷிய இளம்பெண் உடலில் பலத்த காயங்களுடன் ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமான நிலையில் சுய நினைவின்றி கிடந்தார். அதிர்ச்சியடைந்த லாட்ஜ் நிர்வாகிகள், அவரை மீட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து, விடுதி உரிமையாளர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ரஷிய இளம்பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ பரிசோதனையில், ரஷிய இளம்பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ரஷிய இளம்பெண் தங்கி இருந்த லாட்ஜ் அறையில் இருந்து அதிக அளவிலான வெளிநாட்டு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

    ரஷிய இளம்பெண்ணுக்கு கார் டிரைவராக, திருவண்ணாமலை பாவாஜி நகரை சேர்ந்தவர் இருந்துள்ளார். ரஷிய இளம்பெண்ணை சுற்றுலா தலங்களுக்கு அவர் தான் அழைத்து சென்று வந்துள்ளார். அந்த டிரைவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    சனிக்கிழமையன்று கார் டிரைவர் தனது நண்பர்கள் 3 பேருடன் லாட்ஜிக்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி, உயரதிகாரிகள் மூலம் ரஷிய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரஷிய தூதரக அதிகாரிகளும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதனிடையே, பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டதாக லாட்ஜ் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×