search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மழை தீவிரம் - 131 அடியை தாண்டிய பெரியாறு அணை
    X

    கேரளாவில் மழை தீவிரம் - 131 அடியை தாண்டிய பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 132 அடியை நெருங்கி வருகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித் துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை 129.20 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 2 அடி வரை உயர்ந்து 131. 20 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6770 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வினாடிக்கு 1573 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4978 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 48.88 அடியாக உள்ளது. அணைக்கு 1771 கன அடி வீதம் வருகிறது.

    திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கனஅடி என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1850 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு 41, தேக்கடி 28.8, கூடலூர் 16.4, சண்முகாநதி 10, உத்தமபாளையம் 12.4, வைகை அணை 4.2, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×