search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் தயார் செய்யப்பட்ட துணி பைகள்.
    X
    சென்னிமலை பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் தயார் செய்யப்பட்ட துணி பைகள்.

    பிளாஸ்டிக் பைக்கு தடை - சென்னிமலையில் துணி பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சென்னிமலையில் துணி பைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
    சென்னிமலை:

    தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் கைத்தறி துணிகள் மற்றும் மேட் ரகங்களை பயன்படுத்தி பல விதமான துணி பை தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    எளிதில் மக்கும் தன்மை கொண்ட துணிப்பைகள் உள்ளிட்ட மேட் ரக பைகள், கைத்தறி துணிகளில் தயார் செய்து விற்பனை செய்வதில் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது துணி பைகள் உற்பத்தியில் அதிக அளவில் ஈடுபட்டு வரும் காளிக்கோப்டெக்ஸ் மேலாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

    இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத துணி பைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

    காய்கறி வாங்குவதற்கு பயன்படும் பைகள், திருமண தாம்பூல பைகள், ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பைகள், உணவுக் கூடை பைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கைப்பைகள், அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பைகள் என பல வண்ணங்களில் பல மாடல்களில் 30 வகையான துணி பைகளை தயாரிக்கிறோம்.

    பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பைகள் தயார் செய்யப்படுகின்றன. துணிபைகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழைக்கும். 150 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது மொத்தமாக ஆடர்கள் கொடுத்தாலும் தயார் செய்து தருகிறோம். பிரத்யேகமாக நிறுவனங்களின் பெயர் பொறித்து தரவும் ஏற்பாடுகள் செய்கின்றோம். கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பாளர்களின் மேற்பார்வையில் புதிய வடிவமைபில் பெண்கள் விரும்பி வாங்கும் வகையில் தயார் செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×